விடுதியொன்றில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர் மாய்ப்பு

31 0

பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விடுதிக்கு அருகில் வசிக்கும் நபரொருவர் உயிரிழந்தவரது சடலத்தைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடுதியில் பணிபுரியும் 50 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் இந்த விடுதியில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.