மீதொடமுல்லை இழப்புக்கள் பற்றிய தகவல் திரட்டும் பணி இன்று -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

258 0

மீதொடமுல்ல  குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது தகவல்களை, மீதொடமுல்ல மிஹிந்து வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காரியாலயத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சகலரும் தங்களது, உறவினர்கள், அயலவர்கள் உட்பட சொத்து விபரங்களைப் பற்றிய தகவல்களை குறித்த பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையத்துக்கு தாமதிக்காமல் சென்று வழங்குமாறும் அவர் மீதொடமுல்ல மக்களைக் கேட்டுள்ளார்.