பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சவூதிக்கு பயணம்

57 0

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்,  சவூதியை சென்றடைந்தனர்.

இவர்களில் 6  பேர் இலங்கையின் 4  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும்,  மூத்த அரசாங்க ஊழியர்களும், பள்ளிவாசல்களின் இமாம்களும், மற்றும் சமூக சேகவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை சவூதிக்கு வழியனுப்பி வைப்பதிலும், அவர்களுக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்வதிலும், கொழும்பில் உள்ள தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.