யாழில் போதை மாத்திரைகள், வாளுடன் நான்கு இளைஞர்கள் கைது

43 0
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் வாள் என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகளும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.