சபாநாயகர் தலைமையில் வரும் புதன்கிழமை சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம்

76 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்கும் என்றும் 24-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.

மேலும் எந்தெந்த நாட்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்தொடருக்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் என்றும் சபாநாயகர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் வரும் 12-ந்தேதி அதாவது புதன்கிழமை அன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது