யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

38 0
யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி மணற்காட்டு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் , கஞ்சா பொதிகளுடன் இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் 31 கிலோ நிறையுடையது எனவும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.