குப்பைமேடு சரிவு – 100 குடிமனைகள் பாதிப்பு

347 0

மீதொட்டுமுல்லையில் குப்பைமேடு சரிந்து விழுந்ததன் மூலம் அருகில் உள்ள 100 குடிமனைகள் பாதிப்படைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குப்பைமேடு சரிந்ததினால் அருகில் இருந்த தொடர் குடிமனைகள் அகப்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.