ஐ.எஸ்.தீவிராத இயக்கத்துக்கு ஆதரவு – 2 பேர் கைது

333 0

ஐ.எஸ்.தீவிராத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த 2 பேரை அமெரிக்க காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சியோன் நகரை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐ.எஸ். தீவிராத இயக்கத்துக்கு சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு தேடித்தரும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பொருளுதவிகள் வழங்கவும் முயற்சித்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிறுபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.