தமிழகத்தில் மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை

258 0

தமிழகத்தில் மீட்கப்பட்ட இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற தாய் மற்றும் 3 பிள்ளைகள் நேற்று காலை ராமேஸ்வரம் கடற்பரப்பின் மண் திட்டொன்றில் இறக்கிவிட்ட நிலையில், தமிழக கடலோர காவற்துறையினரால்; அவர்கள் மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்டப்படட குறித்த பெண் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் வசித்து வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவர்கள் தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.