இரண்டு பிள்ளைகளின் தாய் வாள்வெட்டுச் சம்பவத்தில் பலி!

36 0

கண்டி, மஹியாவ பகுதியைச் சேர்ந்த நாற்பத்தெட்டு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனிப்பட்ட தகராறு காரணமாக வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த தாய், ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

கண்டி மஹய்யாவ MT பிரிவில் வசித்து வந்த வேளாங்கனி எஷிராணி என்ற நபரே இவ்வாறு சனிக்கிழமை (1) இரவு  உயிரிழந்துள்ளார்.

இக்கொலை தொடர்பாக மஹியாவ எம்.  டி பிரிவில் வசிக்கும் முப்பத்தெட்டு வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரும் சந்தேக நபரும் அயலவர்கள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கண்டி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.