நெதர்லாந்தில் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத்தேர்வு.

117 0

ஆண்டுதோறும் அனைத்துலக தமிழர்கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலக தமிழ்மொழி எழுத்துத்தேர்வு ஐரோப்பா, கனடா,தேசங்களிலும் , நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி கலைக்கழகம் வடபகுதி , மத்தியபகுதி , தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (01-06-2024)சனிக்கிழமை காலை 09-30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது . ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரை படித்த மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் .தேர்வுகள் மதியம் ஒரு மணியளவில் இனிதே நிறைவடைந்தது . செம்மொழியாம் எம்தமிழ் மொழியை புலம்பெயர்ந்த மண்ணில் எம் அடுத்ததலை முறை சரியான முறையில் கற்பதற்கு தன்நலம் கருதாது பணிசெய்யும் கல்விப்பணிக்குழு , ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் பாரட்டுதற்கு உரியவர்கள் .பெற்றோர்கள் தாம் ஏதிலிகளாக வாழ்ந்தாலும் தமிழ்மொழியை பிள்ளைகள் கற்பதிலும், தேர்வுகளில் பங்குகொள்வதிலும் ஆர்வத்துடன் உறுதுணையாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றது.