கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞரின் பரிதாபமான நிலை

381 0

கிண்ணியாவில் உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்கம்பந்தத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பிரதேசத்தில் புத்தாண்டை முன்னிட்டு  உந்துருளி பந்தயத்தில் ஈடுபட்ட மூவரில், குறித்த இளைஞர் மின் கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞர் அண்மையில் திருமணம் முடித்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.