பேரூந்தை ரயில் பாதையில் செலுத்திச் சென்ற சாரதி கைது!

52 0

ரயில் தண்டவாளத்தில் பேரூந்து செலுத்திச் சம்பவம் தொடர்பில் பேரூந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய பஸ் சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய பஸ் சாரதியுடன் சம்பந்தப்பட்ட பஸ்ஸும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.