வௌ்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

48 0

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.