இம்முறை புத்தாண்டில் சதொசவுக்கு கடந்த வருடத்தை விட அதிக வருமானம்

258 0

இவ்வருட சித்திரைப் புத்தாண்டில் சதொச விற்பனை நிலையங்கள் கடந்த புத்தாண்டுக் காலத்தை விடவும் அதிக வருமானத்தை  ஈட்டியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதின் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலையில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி  வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதின் கூறியுள்ளார்.

இப்புத்தாண்டு காலத்தில் பொருட்கள் மீது அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலைகள் முடியுமான வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.