கனமழையால் பெரும் வௌ்ளம்

39 0

களு கங்கையின் குடா கங்கைப் படுகையில் உள்ள மில்லகந்த பிரதேசத்தில் 149.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ள நிலையில், இன்று காலை 9 மணியளவில் அது பெரும் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் புலத்சிங்கள – களுத்துறை வீதி உட்பட பல பிரதான வீதிகளும் சுமார் 300 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நில்வலா ஆற்றின் அனைத்து நீர் அளவீடுகளும் வழமையான நீர்மட்டத்தை தாண்டியுள்ளதுடன், பிட்டபெத்தர பகுதி வெள்ள மட்டத்தை எட்டியுள்ளது.