அவிசாவளையில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

47 0

அவிசாவளை, புவக்பிட்டிய, எலிஸ்டன்வத்தை , கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுள் 36 வயதான தாய், 7 வயதான மகள் மற்றும் 78 வயதான பாட்டன்  ஆகியோர்  அடங்குவர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (02) காலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்  வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.