விபத்தில் இருவர் பலி!

48 0

ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புளத்சிங்கள – மானான பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிய பெண் ஒருவரும், ஹேகொட, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

ஹொரணை புளத்சிங்கள வீதியின் பெல்லபிடிய சந்திக்கு அருகில் ஹொரணை பகுதியில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணித்த போது குறித்த பேருந்தின் இருந்து இறங்கிய இந்த பெண் பேருந்துக்கு முன் பக்கமாக வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அதேபோல், தொடங்கொட, தெலிகட பிரதேசத்தில் வக்வெல்ல பகுதியில் இருந்து தொடங்கொட நோக்கி பயணித்த இராணுவத்திற்கு சொந்தமாக ட்ரக் வாகனம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்துக்கள் தொடர்பில் பேருந்து மற்றும் ட்ரக் வாகனத்தின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.