யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

37 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடையவரே தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

இவர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்ற வழியில் பதுங்கியிருந்த இனந்தெரியாத சந்தேகநபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  இவர்  சத்தம் கேட்ட போது அவரது மனைவி வீட்டிற்கு வெளியே  ஓடி வந்துள்ள வேளை மனைவியையும் தாக்கி அவரிடம் இருந்த  தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.