38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது

36 0

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று (30) இரவு 10 மணியளவில் துபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து 38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட்டு காட்டுன்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.