நடிகர் சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டம்- 4 பேர் கைது

44 0

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் பகுதியில் வைத்து நடிகர் சல்மான் கானை தாக்குவதற்கு திட்டமிட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பன்வெல் பகுதியில் வைத்து சல்மான்கான் காரை மறித்து தாக்குதல் தாக்க நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கேங்ஸ்டர் பிஸ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக லாரன்ஸ் பிஸ்னோய், கோல்டி பிரார் உள்ளிட்ட 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.