நாட்டில் நாளாந்தம் முட்டை நுகர்வு அதிகரிப்பு

53 0

நாட்டில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் நாளாந்த முட்டை நுகர்வு 10 இலட்சத்தால் அதிகரித்துள்ளது.

அதாவது,  கடந்த சில மாதங்களில் முட்டையின்  நாளாந்த நுகர்வு 70 இலட்சமாகவும், பின்னர் 80 இலட்சத்தையும் கடந்துள்ளது.

அதன்படி, நாளாந்தம் முட்டையின்  நாளாந்த நுகர்வு 10 இலட்சத்தால் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் அதிக சத்தான மற்றும் மலிவாக கிடைக்ககூடிய உணவுகளான இறைச்சி, மீன் மற்றும் முட்டை விலைகள் அதிகரித்ததே நுகர்வு அதிகரிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.