குருணாகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜா – எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து, 12,400 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 வங்கி அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா – எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாஸ் ரங்க நாலக பீரிஸின் சகோதரர் என்பதும், அவரது போதைப்பொருள் வலையமைப்பை இவரே நடத்தி வருகிறார் என்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.