பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – ஒருவர் காயம்

63 0

பதுளை – பண்டாரவளை வீதியில் உடுஹுல் பொத்த பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய எல்ல பல்லகெடுவ பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளார்.

காரை செலுத்திய பெண்ணின் கவனயீனமே குறித்த விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பண்டாரவளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.