ஹெரோயினுடன் குடு ரெஜின கைது!

87 0

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற சுற்றிவளைப்பில் வெல்லம்பிட்டிய ‘குடு ரெஜின’ என அழைக்கப்படும் குறித்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிரேண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இருந்த 7 கிராம் 280 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.