மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

45 0

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபகஹவத்த பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

அபகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்கம்பத்திலிருந்த மின்சாரக் கம்பிகள் தரையில் வீழ்ந்து கிடந்த நிலையில் குறித்த பெண் அந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கியதில் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.