பாதாள உலக கும்பலைச் சேர்ந்த களு துஷாரவின் மகன் உட்பட நால்வர் துப்பாக்கியுடன் கைது

40 0

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த களு துஷாரவின் மகன் உட்பட நால்வர் துப்பாக்கியுடன் மாத்தறை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாத்தறை பிக்வெல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் அடங்கிய பொதியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மஹரகம கலு துஷார என்பவர் வெலிகடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மஹரகம கலு துஷாரவின் 24 வயது மகனும் அவரது மூன்று நண்பர்களும் விருந்தொன்றை ஏற்பாடு செய்வதற்காகவும் துப்பாக்கியைச் சரிசெய்வது தொடர்பாகவும் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.