சீரற்ற காலநிலையினால் கொழும்பில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்தன!

39 0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரம் முறிந்து வீழ்த்தன் காரணமாகப் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.