இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இலங்கை இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் அதிகாரிகளிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த துயரமான தருணத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதிநிகழ்வுகள் குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள்என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.