தமிழ் புத்தாண்டு – கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

336 0

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிய ஆண்டு மலர்ந்தது, புதிய தொடக்கத்தை மட்டுமல்லாமல் பொதுவான மேம்பாட்டு இலக்கு, கடின உழைப்பை புதுப்பித்தல், கலாசார பண்புகளை வளர்த்தல் ஆகியவை தொடர்பான நமது உறுதிப்பாட்டை பறை சாற்றுகிறது.

இந்த மகிழ்ச்சியான நன்னாளில் நமது உயர்ந்த பாரம்பரியம், கலாசாரம், பண்புகளை வளர்க்கவும், வளமான இந்தியாவை வளர்க்கவும் உறுதி எடுத்து கொள்வோம். தமிழ் புத்தாண்டு, பைசாகி, விஷூ நன்னாளில் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.