பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தினேஷ் வசந்த” வின் உதவியாளர்கள் மூவர் கைது

34 0

வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “தினேஷ் வசந்த” வின் உதவியாளர்கள் மூவர் போதைப் பொருட்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கம்பஹா , படபொத்த பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கதமுல்ல ஆராச்சிகே தினேஷ் வசந்த என்பவரின் போதைப்பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதாகக் கூறப்படும் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் 50 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மாதெல்கமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், படபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது யுவதியொருவர் 02 கிராம் 560 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணொருவர் 03 கிராம் 270 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5,200 ரூபா பணத்துடனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.