சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு 120 பேரை அனுப்பிய சந்தேக நபர் கைது!

38 0

சட்டவிரோதமாகச் சுற்றுலா விசாவில் சுமார் 120 பேரை ரஷ்யாவிற்கு அனுப்பிய சந்தேகத்தின் பேரில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் நாளை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.