முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் மரகடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

49 0

முல்லைத்தீவு   – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது துக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (20.05.2024) இடம்பெறுள்ளது.

ரெட்பானா விசுவமடு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ஹெண்டர் ரக வாகனத்திற்குள் தண்ணீர் போத்தல்கள், ஊதுபத்தி ,வெற்று பெட்டிகளை கொண்டு மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட துண்டங்களாக போடப்பட்ட பாலை மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் ஹெண்டர் ரக வாகனத்துடன் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.