சட்டவிரோத மதுபானத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது!

27 0

சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கும் உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக திறப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் கவரக்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்  என பொலிஸார் தெரிவித்தனர் .

அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் அவரது வீட்டில் வைத்து  கைது செய்துள்ளனர்.

அவர் தங்கியிருந்த வீட்டில், சட்டவிரோதமாகக் காய்ச்சப்பட்ட மதுபானம், எரிவாயு அடுப்பு, பீப்பாய், அதைக் காய்ச்ச பயன்படுத்திய செப்புச் சுருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர் .