மும்முனை விவாதமே வேண்டும் : டிலான் வலியுறுத்து

36 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா  வலியுறுத்தியுள்ளார்.

இருமுனை விவாதமாக அல்லாமல் குறித்த விவாதம் மும்முனை விவாதமாக அமைந்தால்தான் அது பொருத்தமானதாக அமையும் என்று ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.சஜித், அனுரவுக்கு இடையிலான விவாதம் பேசுபொருளாக மாறியுள்ளது. எனினும், விவாதத்துக்கு இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.