கொழும்பு துறைமுக நகரில் தீ விபத்து!

80 0

கொழும்பு துறைமுக நகரில் தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் வீடொன்றிலேயே இந்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.