கான்ஸ்டபிளின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!

38 0

வாக்குமூலம் பதிவு செய்வதற்காகச்  சந்தேக நபர் ஒருவரை  அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் நடந்து கொண்ட நபரைக் கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை – ஹுலந்தாவ  பகுதியைச்  சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவிப்பதற்காக பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் .

இதன் போது சந்தேக நபரின் கை கண்ணாடியில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.