சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் முல்லைத்தீவில் சந்திப்பு

47 0

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேச பொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னாஸ் காலமர்ட் இடம் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திற்கும் வட கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முல்லைத்தீவிலுள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.