ஊர்காவற்துறையில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு!

32 0

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த காணியின் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும் போது குறித்த கண்ணிவெடிகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அனுமதி பின்னர் குறித்த கண்ணிவெடிகள் மீட்கப்படவுள்ளன.