போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட “பெதி ருகா” களுத்துறையில் கைது

38 0

களுத்துறை மற்றும் பல்வேறு பிரதேசங்களில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த “பெதி ருகா” களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை வடக்கு தொட்டுபல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளரான இவர் களுத்துறை வடக்கு மற்றும் பல்வேறு பிரதேசங்களில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) வெள்ளிக்கிழமை களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.