யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

33 0

யாழ்ப்பாணம் – மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய கடற்றொழிலாளர்கள் கரையொதுங்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16.05.2024) இடம்பெற்றுள்ளது.

பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய கடற்றொழிலாளர்களே படகுடன் கரையொதுங்கியுள்ளனர்.இவ்வாறு கரையொதுங்கிய கடற்றொழிலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.மேலும், விசாரணைக்கு பின்னர் கடற்றொழிலாளர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.