8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

33 0

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல் , மாத்தளை,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கையானது இன்று (16) வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் நாளை (17) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.