போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது!

36 0

வீரகெட்டிய, மெதமுலன பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய, மெதமுலன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்று சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது இந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 9 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.