மன்னா ரமேஷ் துபாய் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்க 2 கோடி ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக தகவல் !

35 0

பல குற்றச்செயல்களுடன்   “மன்னா ரமேஷ்“ துபாயில் கைது செய்யப்பட்ட  போது  துபாய் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அண்மையில்  இலங்கைக்கு  அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷிடம்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிகாரிகள் அவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது .

இந்நிலையில் ,  “மன்னா ரமேஷ்“  நாட்டிற்கு அழைத்து வரப்படும் வரை  பொலிஸ் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது .

மேலும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பல குற்றவாளிகள் பல கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வருகிறார்கள்  என  அவர் மேலும் தெரிவித்துள்ளார் .