சுற்றிவளைப்பு கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் வட்சப் மூலம் தகவல் அனுப்பிய இருவருக்கு விளக்கமறியல்

36 0

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கண்காணித்து வாட்சப் மூலம் குற்றவாளிகளுக்குத் தகவல் அனுப்பியதாகக் கூறப்படும் இருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெய்யந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 30 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.