சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது !

36 0

மொரட்டுவை, சொய்சாபுர பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் ‘சி’ பிரிவின் மேல் மாடியின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த தொடர்மாடி குடியிருப்பானது மிகவும் பழமையானது எனவும், பாரியளவான சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.