ரயிலுடன் சிறிய ரக உழவு இயந்திரம் மோதி விபத்து ; ஒருவர் பலி

35 0

கொஸ்கொட பகுதியில் துவேமோதர ரயில் கடவையில் சிறிய ரக உழவு இயந்திரம் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (13) மாலை மாத்தறையில் இருந்து கொழும்பு மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயிலில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த  உழவு இயந்திர சாரதியும் அவருடன் பயணித்த நபரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தெஹிகஹவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.