வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ள கிராம உத்தியோகத்தர்கள்

49 0

கிராம உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் வேலை நிறத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பித்து உள்ளதாக இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்கப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிராம உத்தியோகத்தர்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.