கடத்த வாரம் பம்பலப்பிட்டி, காலி வீதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களுக்கு நீதிமன்றம் 427,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.