நிஹாரியவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி ; நால்வர் காயம்

49 0

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் மரணச்சடங்கு நிகழ்வொன்றிற்காக வீதியிலிருந்த மின் கம்பத்தில் மின்விளக்குகளைப் பொருத்தச் சென்ற ஐவர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

திஹாரிய, கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நால்வரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியிலிருந்த மின் கம்பமானது மின்விளக்குகளைப் பொருத்தப் பயன்படுத்தப்பட்ட மின் கம்பிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.